பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் தொடரில் நாளை இடம்பெறவுள்ள இறுதிப்போட்டியில் கிறீஸ் நாட்டு வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாசை, நொவாக் ஜோக்கோவிச் எதிர்கொள்ளவுள்ளார்.
இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் உலகின் முதல் நிலை வீரரான நொவாக் ஜோக்கோவிச் மற்றும் மூன்றாம் நிலை வீரரான ரபேல் நடால் ஆகியோர் மோதினர்.
முதல் சுற்றில் 6 -3 என்ற செட் கணக்கில் ரபேல் நடால் முன்னிலை வகித்தார்.
அதன்பிறகு இரண்டாவது சுற்றை 6 – 3 என்ற கணக்கிலும், மூன்றாவது சுற்றை 7- 6 என்ற கணக்கிலும் நொவாக் ஜோக்கோவிச் கைப்பற்றினார்.
இதற்கமைய நாளை இடம்பெறவுள்ள இறுதிப் போட்டிக்கு நொவாக் ஜோக்கோவிச் தகுதி பெற்றுள்ளார்.