நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன் கிண்ண இறுதிப் போட்டிக்கான அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் இடம்பெற வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் போட்டி சவுத்தாம்டனில் நாளை இடம்பெறவுள்ளது.
இந்தப் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட குழாம் விபரத்தை இந்தியாவும், நியூசிலாந்தும் அறிவித்துள்ளன.
இந்நிலையில் போட்டியில் விளையாடவுள்ள 11 பேர் கொண்ட இந்திய அணி தொடர்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
போட்டி இடம்பெறவுள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம்பெறுவது அவசியமென இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.