ஒலிம்பிக்குக்கு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் -ஜப்பான் சுகாதார தரப்பு

download 36
download 36

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாமென ஜப்பானின் சுகாதார தரப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்களை அரங்குகளில் நடமாட அனுமதித்தால் ஜப்பானில் மீண்டும் கொவிட் பரவல் அதிகரிக்கக்கூடும்.

எனவே ஒலிம்பிக் போட்டிகளுக்கு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் யூலை மாதம் 23ம் திகதி ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகின்றன.

இதற்காக ஜப்பானில் தற்போது அமுலில் உள்ள அவசரகால நிலை பகுதியளவில் தளர்த்தப்படவுள்ளதாக ஜப்பான் அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், சுகாதார தரப்பினர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.