விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக நயோமி ஒசாகா அறிவிப்பு

naomi osaka to be world no 1 again
naomi osaka to be world no 1 again

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக உலக இரண்டாம் நிலை வீராங்கனையான நயோமி ஒசாகா அறிவித்துள்ளார்.

இந்த போட்டித் தொடர் எதிர்வரும் 28ஆம் திகதி லண்டனில் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த நவோமி ஒசாகாவின் பேச்சாளர் அவர் தற்போது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற பிரென்ஞ் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து இடைநடுவில் நவோமி ஒசாகா விலகியிருந்தார்.

பாரம்பரிய செய்தியாளர் சந்திப்பை புறக்கணித்தமைக்காக அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் விம்பிள்டன் டென்னிஸ் தொடரிலிருந்தும் விலகுவதாக நவோமி ஒசாகா அறிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த தொடரிலிருந்து ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலும் அண்மையில் விலகியமை குறிப்பிடத்தக்கது.