ஜப்பான் சென்ற உகாண்டா ஒலிம்பிக் குழு உறுப்பினருக்கு கொரோனா

rk ugandaolympicteam 200621
rk ugandaolympicteam 200621

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கெடுப்பதற்கான ஜப்பானுக்கு சென்றிருந்த உகாண்ட ஒலிம்பிக் அணியின் உறுப்பினர் ஒருவர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் ஐந்து வாரங்கள் உள்ள நிலையில் போட்டிகளில் பங்கெடுக்க வரும் வீரர்கள் மற்றும் உறுப்பினர்களில் கண்டறியப்பட்ட முதல் கொவிட்-19 தொற்று அடையாளம் இதுவாகும்.

உகாண்டாவிலிருந்து டோக்கியோவின் நரிட்டோ விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தரையிறங்கிய ஒன்பது பேர் கொண்ட குத்துச் சண்டை வீரர்கள் கொண்ட குழு உறுப்பினர் ஒருவருக்கே இவ்வாறு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜூன் முதலாம் திகதி அவுஸ்திரேலிய மகளிர் சாப்ட்போல் அணியினருக்கு பின்னர் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கெடுக்க ஜப்பானுக்கு சென்ற இரண்டாவது குழு இதுவாகும்.

இந்த குழு அனைவருக்கும் ஜப்பானுக்கு வருவதற்கு முன்பு உகாண்டாவில் தடுப்பூசி செலுத்தப்பட்டு, சோதனையில் எதிர்மறையான முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.