இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வென்றுள்ளதுடன், முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளுக்கும் இடையில் மூன்று இருபதுக்கு20 போட்டிகள் இடம்பெறுகின்றன.
கார்டிப்பில் இரவு நேர ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்தப் போட்டிகளில், நேற்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 1 க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.