எஞ்சிய 31 ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் திகதிகள் அறிவிப்பு!

download 6 4
download 6 4

கொரோனா வைரஸ் காரணமாக இடைநிறுத்தப்பட்ட இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகளை நடத்துவதற்கான திகதி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 19ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி வரை இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் எஞ்சிய 31 போட்டிகளும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டிகள், ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய், சார்ஜா, அபுதாபி உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தவருடத்திற்கான இந்தியன் பிரிமியர் லீக் தொடர் கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது.

4 அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதை அடுத்து இந்தியன் பிரிமியர் லீக் தொடர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.