டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹொக்கி அணி முதன் முறையாக அரையிறுதிக்கான வாய்ப்பினை பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் இந்திய மகளிர் அணிகள் இன்று கால் இறுதி ஆட்டத்தில் மோதியிருந்தன.
இந்தப்போட்டியில், ஆஸ்திரேலிய ஹொக்கி மகளிர் அணியை 1-0 என்ற அடிப்படையில் வீழ்த்தி இந்திய மகளிர் ஹொக்கி அணி அரையிறுதிக்கான வாய்ப்பினை பெற்றுக்கொண்டது.