கிரிக்கெட் விளையாடுவதற்கு பாகிஸ்தான் பாதுகாப்பான இடம்

images 10 1
images 10 1

கிரிக்கெட் விளையாடுவதற்கு பாகிஸ்தான் பாதுகாப்பான இடம் என இலங்கை அணியின் முன்னணித் துடுப்பாட்ட வீரர் ஏஞ்சலோ மத்தியுஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கிரிக்கெட் அணி அண்மையில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியது.

2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் இடம்பெற்ற முதல் டெஸ்ட் தொடராக இது பதிவாகியுள்ளது.

இந்நிலையில், தொடரை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய மத்தியூஸ், பாகிஸ்தானின் விருந்தோம்பலிற்கும் வழங்கப்பட்ட பாதுகாப்பிற்கும் நன்றி தெரிவித்து டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மிகச்சிறந்த விருந்தோம்பலிற்கும் மிகவும் சிறப்பான பாதுகாப்பிற்கும் நன்றி என மத்தியுஸ் தெரிவித்துள்ளார்.

எங்களை சிறப்பாக பார்த்துக்கொண்டார்கள், உலகின் எந்த பகுதியையும் போலவும் நாங்கள் பாகிஸ்தானில் பாதுகாப்பாக உணர்ந்தோம் என மத்தியுஸ் தெரிவித்துள்ளார்.