இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி!

SriLanka SouthAfrica
SriLanka SouthAfrica

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் 7 மணியளவில் இன்றைய போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளை கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியில் வெற்றிக்கொண்ட தென்னாப்பிரிக்க அணி 1க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.

இந்தநிலையில், இன்றைய போட்டியானது இரண்டு அணிகளுக்கும் தீர்மானமிக்க போட்டியாக கருதப்படுகின்றது.