முன்னாள் தலைவர் திலங்க சுமதிபாலவிற்கு விதிக்கப்பட்டுள்ள தடை

sumathipala
sumathipala

முன்னாள் இலங்கை கிரிக்கட் சபைத் தலைவர் திலங்க சுமதிபாலா இலங்கை கிரிக்கெட்டில் எந்தவொரு பதவியையும் வகிப்பதைத் தடுக்க விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சிறப்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாட்டின் கிரிக்கெட் நிருவாகக் குழுவிற்கு எழுதிய கடிதத்தில், எஸ்.எல்.சி கமிட்டியின் கூட்டத்தில் பங்கேற்பதற்கும் வாக்களிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் எந்தவொரு செயல்பாடுகளையும் கடமைகளையும் செய்யவிடாமல் தடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

விளையாட்டுக் கழகத்திற்குக் கிடைத்த புகாரைத் தொடர்ந்து மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்துள்ளதாகவும் ஒரு மாதத்திற்குள் அறிக்கை அளிப்பதற்கும் இந்த குழுவிற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.