இலங்கை அணியுடன் இன்று இணைகிறார் மஹேல

Mahela 700x375 1
Mahela 700x375 1

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள மஹேல ஜெயவர்தன இன்று அபுதாபியில் இலங்கை அணியுடன் இணையவுள்ளார்.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் பிளே – ஓப்க்கான வாய்ப்பினை மும்பை அணி தவறவிட்டுள்ள நிலையில் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்டுவந்த மஹேல எதிர்பார்த்த திகதிக்கு முன்னதாக இலங்கை அணியுடன் இணையவுள்ளார்.

முன்னதாக ஒக்டோபர் 16 முதல் ஒக்டோபர் 23 வரை 7 நாள் காலப்பகுதிக்கு இலங்கை அணியுடன் மஹேல ஜெயவர்த்தன இருப்பார் என்று இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது.

ஆனால் தற்சமயம் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மஹேல ஜெயவர்த்தனவின் சேவையைப் பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.