மலிங்க தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு!

images 19
images 19

எதிர்வரும் 5ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகவுள்ள இந்திய அணிக்கெதிரான இருபதற்கு இருபது தொடருக்கான எதிர்பார்ப்பு மிக்க இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியின்தலைவராக லசித் மாலிங்கவும் உப தலைவராக நிரோஷன் டிக்வெல்லவும் நியமிக்கப்பட்டுள்ளனர் .

மேலும், சமீபகாலமாக ரி-20 போட்டிகளில் சிறப்பாக விளையாடிவரும் பானுக ராஜபக்ஷ அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இதுதவிர அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் ஒசேத பெனார்டோ ஆகியோருக்கும் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதேவேளை முன்னணி வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் திசர பெரேரா , தனஞ்சய டி சில்வா ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அறிவிக்கப்பட்டுள்ள அணியில் லசித் மாலிங்க தலைமையிலான இந்த அணியில், தனுஷ்க குணதிலக, குசல் பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல, பானுக ராஜபக்ஷ, அஞ்சலோ மெத்யூஸ், ஒசேத பெர்ணான்டோ, தசுன் சானக்க, செஹான் ஜெயசூரிய, லக்ஷான் சந்தகென், வனிது ஹசரங்க, இசுரு உதான, லஹிரு குமார, நுவன் பிரதிப், கசுன் ரஜித ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதேவேளை இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையவுள்ளது குறிப்பிடத்தக்கது.