இருபதுக்கு 20 உலகக்கிண்ண நடுவருக்கு 6 நாட்கள் தடை!

1635838817 5403224 hirunews
1635838817 5403224 hirunews

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள போட்டி நடுவர் ஒருவருக்கு 6 நாட்களுக்கு தடைவிதிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.

போட்டியில் பங்குபற்றும் தரப்பினருக்கான உயிர்குமிழி நடைமுறையை குறித்த நடுவர் மீறியதன் காரணமாக இந்த தடை விதிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, இங்கிலாந்தைச் சேர்ந்த மைக்கல் கஃப் என்ற குறித்த நடுவருக்கு, 6 நாட்களுக்கு போட்டியில் பங்குபற்றுவதற்கு தடைவிதிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சிறந்த நடுவர்களுள் ஒருவரான மைக்கல் கஃப், இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரராவார்.