இருபதுக்கு20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக பிராவோ அறிவிப்பு!

701057
701057

2021 இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் பின்னர் இருபதுக்கு20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதாக மேற்கித்தியத் தீவுகள் அணி வீரர் ட்வைன் பிராவோ அறிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற, இலங்கையுடனான போட்டியின் பின்னர் தமது ஓய்வை பிராவோ அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்வைன் பிராவோ கூறுகையில், “நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். எனது வாழ்க்கையில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருந்தபோதிலும், விளையாட்டு வாழ்க்கை சிறப்பாக அமைந்தது. கரீபியன் மக்கள் சார்பில் விளையாடியதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

இது நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் கடினமான உலகக்கிண்ண போட்டியாக அமைந்துள்ளது. அவுஸ்திரேலியாவுடன் நடக்கும் இருபதுக்கு20 போட்டியுடன் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறேன்” என்று தெரிவித்தார்.

பிராவோ மேற்கிந்திய தீவுகள் அணியின் மிகப்பெரிய பலமாக இருந்தார். 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இருபதுக்கு20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய அணியில் இடம் பெற்றிருந்த பிராவோ அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.

இவர் மேற்கிந்திய அணிக்காக 85 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி 76 விக்கெட்டுகளை பெற்றுள்ளதுடன்,  1,229 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள பிராவோ, அந்த அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.