அபுதாபி கிரிக்கெட் மைதானத்தின் பொறுப்பதிகாரி மோகன் உசிங், ஆப்கானிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி ஆரம்பமாவதற்கு முன்னதாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மரணத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
இதேவேளை அபுதாபியில் இன்று(07) இடம்பெற்ற இருபதுக்கு20 உலகக்கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டிக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.