இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ளது.
இதற்கமைய, அந்த அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடவுள்ளதுடன், விராட் கோலி, ஜஸ்பிரிட் பும்ரா உள்ளிட்ட சில சிரேஷ்ட வீரர்களுக்கு இந்தத் தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம் நியூஸிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் இந்தத் தொடரில் பங்கேற்காத நிலையில், டிம் சவுதி நியூஸிலாந்து அணியை வழிநடத்துகிறார்.