4 நாள் டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணித்தலைவர் எதிர்ப்பு

virat
virat

ஐ.சி.சி இன் நான்கு நாட்களைக் கொண்ட டெஸ்ட் போட்டிகளிற்கு இந்திய அணியின் தலைவர் விராட் கோலி தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இத்திட்டத்தினால் ஐந்து நாள் டெஸ்ட் போட்டியின் புனிதத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவித்தார்.

டெஸ்ட் போட்டி குறித்து செய்யக்கூடிய பாரிய மாற்றம் என்றால் அது பகலிரவு இரவு டெஸ்ட் போட்டிகளை அதிகளவிற்கு ஊக்குவிப்பது மாத்திரமே என அவர் தெரிவித்தார்.