இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க தமது பதவிக்காலம் முடிவடைய முன்னர் பதவியில் இருந்து விலக்கியமையினால் தமது கீர்த்திக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து இலங்கை கிரிக்கட் சபையிடம் நட்டஈடு கோரியுள்ளார்.
இதற்காக 5 மில்லியன் டொலர்கள் நட்டஈடு கோரி இது தொடர்பான கடிதத்தை அவர் இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மோகன் டி சில்வாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை அணி தமது திறமையை காட்டவில்லை.
இந்தநிலையில் அதிகளவான சம்பளத்தை பெறும் ஹத்துருசிங்க தோல்வி கண்டுள்ளதாக அன்றைய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ குற்றம் சுமத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.