சுற்றுலா இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்குமிடையில் மூன்று ஒருநாள் போட்டிகளும், மூன்று T20 போட்டிகளும் இடம்பெறவுள்ளன. இதில் திமுத் கருணாரத்ன, லசித் மாலிங்க, அஞ்சலோ மெத்தியூஸ் உள்ளிட்ட இலங்கை அணியின் பிரபல பத்து வீரர்கள் பாகிஸ்தான் சுற்றுலா தொடரில் பாதுகாப்பு காரணங்களை குறிப்பிட்டு அத்தொடரில் பங்கேற்ற தயக்கம் காட்டியிருந்தனர்.
இதனுடன் பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுவதால் பாகிஸ்தான் தொடருக்கு முன்னர் அந்நாட்டு பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் மீண்டும் பரிசீலிக்குமாறு அரசாங்கத்தால் இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் தொடரை நடத்துவதற்காக சார்ஜாவில் இருந்து அழைப்பு கிடைத்துள்ளது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் இதுவரை இது தொடர்பில் கோரவில்லை என்றும் அவ்வாறு தேவை ஏற்படின் தமது கிரிக்கட் மைதானத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் தொடரை நடத்த முடியும் என சார்ஜா கிரிக்கட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.