இந்திய அணி கடந்த முறை எதிர்கொண்ட அவுஸ்ரேலிய அணியில் இருந்து தற்போதுள்ள அணி முற்றிலும் மாறுபட்டது என டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவுஸ்ரேலிய அணித்தலைவர் தெரிவிக்கையில்,
“இந்திய அணி கடந்த 2018 கோடைக்காலத்தில் அவுஸ்ரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அப்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்தது.
ஆயினும் நாங்கள் தற்போது இரக்கமற்ற அணியாக திகழ்கிறோம். இந்தியா தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று அவுஸ்ரேலிய டெஸ்ட் அணித்தலைவர் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.
கடந்த முறை விளையாடிய அவுஸ்ரேலிய அணியை விட இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ள அணி முற்றிலும் மாறுபட்டது. இரு அணி தொடர்களுக்கும் இடையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பும் உள்ளது. இரண்டு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் இருக்கும்.
எங்களுடைய ஆட்டம் இப்படியே தொடரும் என்றால், இரு அணிகளும் டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும் எனும் நிலையில்
தொடர் அற்புதமானதாக இருக்கும்” என தெரிவித்தார்.