ஆசிய கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது

asian cup
asian cup

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) இலங்கையில் நடைபெற்றது.

இதில் அரையிறுதிப் போட்டிகள் மழை காரணமாக தடைப்பட குழுவில் முதலிடத்தைப் பெற்ற இந்திய மற்றும் பங்காளதேஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தன.

இன்று ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 32.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ஒட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. 107 ஒட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் பங்காளதேஸ் அணி களமிறங்கியது. பங்காளதேஸ் அணி 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இப் போட்டியின் ஆட்ட நாயகனாக அதர்வாவும் தொடராட்ட நாயகனாக இந்திய அணியின் அர்ஜூன் அசாத்தும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

இதனையடுத்து 7வது முறையாக ஆசிய கோப்பையை இந்திய அணி தட்டி சென்றது.