அயர்லாந்து அணிக்கெதிரான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி டக்வர்த் லுயிஸ் முறைப்படி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, மேற்கிந்திய தீவுகள் அணி முழுமையாக கைப்பற்றியது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி, 49.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 203 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஹென்ரிவ் பல்பிரைன் 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சு சாரபில் ஹெய்டன் வோல்ஷ் 4 விக்கெட்டுகளையும், ஒசேன் தோமஸ் 3 விக்கெட்டுகளையும், ரோஸ்டன் சேஸ் 2 விக்கெட்டுகளையும், ரோமாரியோ செப்பர்ட் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 204 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 36.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, மழைக் குறுக்கிட்டது.
இதனால் போட்டியின் வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிப்பதற்கு டக்வர்த் லுயிஸ் முறை கடைபிடிக்கப்பட்டது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 5 விக்கெட்டுகளால் வெற்றியை பதிவு செய்தது.
இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் எவீன் லீவிஸ் தெரிவு செய்யப்பட்டார்.