கைவிடப்பட்ட முதலாவது T20 போட்டி

ind vs rsa
ind vs rsa

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது T20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

இதனால் தர்மசாலாவில் நேரடியாக போட்டியை கண்டு ரசிக்க வந்த ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், ரோஹித் (vc), லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (WK), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, க்ருனல் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், தீபக் சாஹர், கலீல் அஹ்மது, நவ்தீப் சைனி ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

குவிண்ட் டி காக் தலையிலான தென் ஆப்பிரிக்கா அணியில் டேவிட் மில்லர், வான்டர் டுசன், பவுமா, ரீசா ஹெண்ட்ரிக்ஸ், பிஜோன் போர்ட்டூன், புரன் ஹென்ட்ரிக்ஸ், ஆன்ரிச் நார்ஜே, சுமுட்ஸ், பிரிட்டோரியஸ், ரபடா, பெகுல்வாயோ, ஜூனியர் டாலா, தபரிஸ் ‌ஷம்சி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இரு அணிகளுக்கு இடையிலான 2வது T20 போட்டி சண்டிகாரில் வரும் 18ஆம் திகதி நடைபெறும் அதனையடுத்து 3வது T20 போட்டி பெங்களூரில் வரும் 22ஆம் திகதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 2ஆம் திகதி விசாகப்பட்டினத்திலும் இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 10ஆம் திகதி புனேவிலும் 3வது டெஸ்ட் போட்டி அக்டோபர் 19ஆம் திகதி ராஞ்சியிலும் நடைபெறும்.