இரண்டாவது T-20 போட்டியில் இந்திய அணி வெற்றி

ind vs rsa
ind vs rsa

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் 3 போட்டிகள் கொண்ட முதலாவது T-20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது T-20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

மொஹாலியில் நடைபெற்ற இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 5 விக்கட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. தென்னாபிரிக்கா சார்பில் அணித்தலைவர் குயின்டன் டி கொக் 52 ஒட்டங்களையும் பவுமா 49 ஒட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

150 ஒட்டங்களை இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களைப்பெற்று 7 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அணித்தலைவர் விராட் கோலி ஆட்டமிழக்காது 72 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

ஆட்டநாயகனாக விராட் கோலி தெரிவுசெய்யப்பட்டார்.

இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கின்றது,

T-20 போட்டிகளில் விராட் கோலி தனது 22வது 50 ஒட்டங்களை பெற்றுக்கொண்டு அதிக 50 ஒட்டங்களை பெற்றுக்கொண்டவர்களுக்கான தரவரிசையில் முதலிடம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது,