சீனாவில் நடைபெறவிருந்த பார்முலா இ சாம்பியன்ஷிப் கார் பந்தயம் கொரோனா வைரஸின் பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
2019 தொடக்கம் 2020 ஆம் ஆண்டுகாலப் பகுதியின் ஆறாவது பார்முலா இ சாம்பியன்ஷிப் கார் பந்தயம், வுஹானிலிருந்து 1,000 மைல் தொலைவில் உள்ள சான்யா நகரில் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவிருந்தது.
கொரோனா வைரஸின் பரவல் காரணமாக உலக சுகாதார ஸ்தாபனம் உலகளாவிய ரீதியில் அவசர காலநிலையை பிரகடனப் படுத்தியுள்ளது.
இந் நிலையிலேயே பார்முலா பந்தயத்தில் கலந்து கொள்ளும் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் நலன் கருதி பார்முலா இ சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தை ஒத்தி வைத்துள்ளதாக அதன் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் குறித்த கார் பந்தயத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.