சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.
நியூஸிலாந்தின் மவுண்ட் மங்கனியுவில் இடம்பெற்று வரும் இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதற்கமைய முதலில் துடுப்பாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 296 ஓட்டங்களை பெற்றது.
இந்திய அணி சார்பில் கே.எல்.ராகுல் 112 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றுக்கொடுத்ததுடன் ஸ்ரேயாஸ் ஐயர் 62 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் பெனெட் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் 297 என்ற வெற்றி இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி தற்போது துடுப்பெடுத்தாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.