ரி-20 வரலாற்றில் கீரான் பொலார்ட் சாதனை!

polard
polard

ரி-20 வகை கிரிக்கெட் இல் இதுவரை 499 போட்டிகளில் விளையாடியுள்ள மேற்கிந்திய் தீவுகளின் அதிரடி வீரரும் ரி-20 அணி தலைவருமான கீரான் பொலார்ட் இன்று இலங்கை அணியுடனான முதலாவது ரி-20 போட்டியில் பங்கேற்பதன் மூலம் ரி-20 வரலாற்றில் 500 போட்டிகளைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைக்க உள்ளார்.

இன்று மாலை கண்டி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவிருக்கும் ரி-20 போட்டியை வென்று பொலார்ட்டின் சாதனைக்கு பரிசளிக்க மேற்கிந்தியத் தீவுகள் அணி மும்முரமாக உள்ள நிலையில் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இது தவிர பொலார்ட் ரி-20 கிரிக்கெட்டில் படைத்துள்ள சாதனைகள் வருமாறு ரி-20 தொடரின் இறுதிப் போட்டிகளில் அதிக தடவை (23) இடம்பிடித்த முதல் வீரர் 17 அணிகளுக்காக விளையாடியதன் மூலம் ரி-20 போட்டிகளில் அதிக அணிகளை பிரதிநிதித்துவம் செய்து விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

வெவ்வேறு 6 அணிகளின் சார்பில் 13 ரி-20 தொடர்களை தலைமைதாங்கி வென்றுள்ளார்.

2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ரி-20 உலகக்கிண்ணத்தை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஒருவராக இருந்துள்ளார்.

ரி-20 போட்டிகளில் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 2வது வீரராவார். மே.இந்தியத் தீவுகள் அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் முதலாவது விரர் என்ற சாதனையை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 170 போட்டிகளில் விளையாடியுள்ளதன் மூலம் ஒரு அணிசார்பாக அதிகமான ரி-20 போட்களில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனைக்கும் பொலார்ட் சொந்தக்காரராகியுள்ளார்.