6 வது முறையாக FIFA சிறந்த வீரர் விருது பெற்ற மெஸ்ஸி

MESSI
MESSI

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (FIFA) சிறந்த வீரருக்கான விருதை‌ அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல்‌ மெஸ்ஸி பெற்றார்.

சிறப்பாக செயல்படும் கால்பந்து வீரர்களுக்கு, ஆண்டுதோறும் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் சார்பாக சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்காக விருதை நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி தன்வசமாக்கியுள்ளார். அவர் 46 வாக்குகள் பெற்று வான் டிஜிக் (Van Dijk) மற்றும் ரொனால்டோவைப் பின்னுக்குத் தள்ளி சிறந்த வீரருக்கான விருதை வென்றார்.

இதன் மூலம் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் சிறந்த வீரர் விருதை ஆறாவது முறையாக மெஸ்ஸி பெற்றுள்ளார். நட்சத்திர வீரர் ரொனால்டோவும் ஆறு முறை சிறந்த வீரருக்காக விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் மெஸ்ஸி 2009, 2010, 2011, 2012 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் லியோனல் மெஸ்ஸி இந்த விருதை இதற்கு முன்னர் சுவீகரித்துள்ளதுடன், தொடர்ச்சியாக 3 வருடங்கள் இந்த விருதை வென்ற ஒரே ஒரு வீரராகவும் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.