வசவதா, புஜாரா அபாரம்: சவுராஷ்டிரா அசத்தல்

1d
1d

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதியில் பெங்கால், சவுராஷ்டிரா அணிகள் விளையாடுகின்றன. முதல் நாள் முடிவில் சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 206 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இரண்டாம் நாள் ஆட்டத்தின்போது வசவதாவுடன், வீரர் புஜாரா இணைந்தார். சுமார் ஐந்து மணி நேரம் மரதன் ஆட்டம் விளையாடிய இருவரையும் பிரிக்க முடியாமல் திணறினர். காய்ச்சலில் இருந்து மீண்ட புஜாரா அரை சதம் அடித்தார்.

பொறுப்புடன் விளையாடிய வசவதா (106 ரன், 287 பந்து) சதம் கடந்தார். புஜாரா 66 ரன்களில் (237 பந்து) அவுட்டானார். முகேஷ் பந்தில் பிரேராக் டக் அவுட்டானார். ஆட்ட நேர முடிவில், சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 384 ரன்கள் எடுத்திருந்தது. சிராக் (13), தர்மேந்திராசின் ஜடேஜா (13) அவுட்டாகாமல் இருந்தனர்.