ஓய்வு பெறுகிறார் ஆந்த்ரே ஷெம்ப்ரி

3d
3d

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் விளையாடும் சென்னையின் எப்.சி அணியின் முன்னணி கால்பந்து வீரரான ஆந்த்ரே ஷெம்ப்ரி (33), நடப்பு கால உறுதியுடன் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

லீக் சுற்றின் தொடக்கத்தில் வெற்றிகளைக் குவிக்க முடியாமல் தடுமாறிய சென்னையின் எப்.சி அணி, பின்னர் சிறப்பாக விளையாடி அரை இறுதிக்கு தகுதி பெற்றதுடன் இறுதிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.

மார்ச் 14ம் திகதி கோவாவில் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது.

தடுமாறிய அணியை தரமான அணியாக மாற்றியதில் புதிய பயிற்சியாளர் ஓவன் கோயல், கப்டன் லுசியான் கோயன் ஆகியோருடன் முன்கள ஆட்டக்காரரான ஆந்த்ரே ஷெம்ப்ரியும் காரணம்.

அவர் சென்னை அணிக்காக நடப்புத் தொடரில் 5 கோல் அடித்துள்ளார். மேலும் 3 கோல் அடிக்க காரணமாக இருந்துள்ளார். மால்டா குடியரசு நாட்டைச் சேர்ந்த ஷெம்ப்ரி, தேசிய அணிக்காக 94 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார்.