கராச்சியில் பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக ஒரு பந்து வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் 10 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் ஒருநாள் போட்டியாக இது அமைந்த போதிலும் மழை காரணமாக குறித்த போட்டி நடைபெறாமை பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட பின்னர் இரண்டாவது போட்டி எதிர்வரும் திங்கட்கிழமை(30.09.2019) கராச்சியில் நடைபெறவுள்ளது.