கிரிக்கெட் விளையாட்டு இனம்கண்ட வரலாற்று நாயகர்களில் ஒருவரான குமார் சங்கக்கார உயர் கௌரவத்திற்குரிய மெரிலேபோன் கிரிக்கெட் கழகத்தின் (MCC) தலைவராக இன்று (1.10.2019) பொறுப்பேற்றுள்ளார்.
இன்று பதவியை பொறுப்பேற்றுள்ள குமார் சங்கக்கார கிரிக்கெட் விளையாட்டின் விதிமுறைகள் வடிவமைக்கும் மெரிலேபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக மாறும் முதல் பிரித்தானியர் அல்லாத நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டின் மே மாதத்தில் இடம்பெற்ற மெரிலேபோன் கிரிக்கெட் கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தின் மூலம் குமார் சங்கக்கார, மெரிலேபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக ஒக்டோபர் மாதம் தொடக்கம் ஒரு வருட காலத்திற்கு செயற்படுவார் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.