பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் தொடரைக் கைப்பற்றியது

pakistan
pakistan

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பாகிஸ்தான்-இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. முதலாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 297 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இலங்கை சார்பாக தனுஷ்க குணதிலக 133 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. பாகிஸ்தான் சார்பாக பஹர் சமான் 76 ஒட்டங்களையும், அபித் அலி 74 ஒட்டங்களையும், ஹரிஸ் சொகைல் 56 ஒட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

ஆட்டநாயகனாக அபித் அலியும் தொடராட்ட நாயகனாக பாபர் அசாமும் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் இலங்கை மற்றும் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட T20 தொடர் எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.