2022 பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் போட்டி: இலங்கை 04 போட்டிகளில் தோல்வி

FIFA World up
FIFA World up

லெபனானுக்கு எதிரான 2022 பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் போட்டி கொழும்பு குதிரைப்பந்தயத் திடல் மைதானத்தில் மழைக்கு மத்தியில் நேற்று(Oct.15) இரவு நடைபெற்றது.

இந்தப் போட்டி இரு அணி வீரர்களுக்கும் கடுமையாக இருந்ததோடு மோசமான காலநிலை மற்றும் ஆடுகளத்திலும் லெபனான் வீரர்கள் இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்தனர்.

முதல் பாதியை விடவும் இலங்கை அணி இரண்டாவது பாதியை சற்று சிறப்பாக ஆரம்பித்த இலங்கையின் தாக்குதல் ஆட்டம் ஒருங்கிணைப்பு இன்றி இருந்ததோடு அணியின் பந்து பரிமாற்றமும் இலக்கு இன்றி இருந்ததால் எதிரணிக்கு சவால் கொடுக்க முடியவில்லை.

லெபனானுக்கு எதிரான 2022 பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் இலங்கை அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியை சந்தித்தது. இலங்கை அணி இந்த உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. வெளிநாட்டில் 3 போட்டிகள் உட்பட இலங்கை அணிக்கு இன்னும் நான்கு போட்டிகள் எஞ்சியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.