புரோ கபடி லீக்; பெங்கால் வாரியர்ஸ் கிண்ணத்தை கைப்பற்றியது

delhi vs bengal
delhi vs bengal

புரோ கபடி லீக் தொடர் ஏழாவது சீசனில், இன்று டெல்லி தபாங் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் வெற்றிப் பெற்று தனது முதலாவது கிண்ணத்தைக் கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது.

பெங்கால் வாரியர்ஸ் அணியைப் பொறுத்தவரை, அணித்தலைவர் மணீந்தர் சிங் காயம் காரணமாக அரையிறுதியில் ஆடவில்லை. இந்நிலையில் இறுதிப் போட்டியிலும் அவர் விளையாடாமையினால் முகமது நபிபக்ஷ்
அணித்தலைவராக செயற்பட்டிருந்தார்.

தபாங் டெல்லி- பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதிய இறுதிப்போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 39-34 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.

புரோ கபடி லீக்-2019 கிண்ணத்தை கைப்பற்றிய பெங்கால் வாரியர்ஸ்

பெங்கால் வாரியர்ஸ் அணியில் முகமது நபிபக்ஷ் 10 புள்ளிகளும், சுகேஷ் ஹெக்டே 8 புள்ளிகளும் எடுக்க, டெல்லி சார்பில் நவீன் குமார் மட்டும் 18 புள்ளிகள் சேர்த்தார்.

பட்டத்தை கைப்பற்றிய பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு ரூ.3 கோடியும், 2வது இடம் பெற்ற தபாங் டெல்லி அணிக்கு ரூ.1.8 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.