இலங்கை வலைப்பந்து வீராங்கனை மலோனி விஜேசிங்க (17 வயது) நேற்று (Oct.20) காலை கலமாகியுள்ளார். இரத்தப் புற்று நோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் அகில இலங்கை வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டியின் போது சுகவீனமுற்ற மலோனி விஜேசிங்க, மருத்துவ சோதனையில் நோய் தீவிரமடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டதாக அவரது குடும்ப வட்டாரம் குறிப்பிட்டிருந்தது.
சில நாட்களுக்கு முன்னர் அவரது நோய் தீவிரமடைந்து மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த ஆண்டு ஜூனில் இலங்கை இளையோர் அணிக்கு உப தலைவியாகவும் நியமிக்கப்பட்டார். கோல் ஷூட்டராக ஆதிக்கம் செலுத்தும் அவர் தொடரில் இலங்கை அணி 3 ஆவது இடத்தை பிடிப்பதற்கும் பிரதான பங்காற்றினார்.