இந்த முறை சென்னை சுப்பர் கிங்ஸ் அணிதான் கோப்பையை வெல்லும்-பிரெட் லீ

1427259521 4701
1427259521 4701

ஐ.பி.எல் இருபதுக்கிருபது கிரிக்கெட் தொடர் இதுவரை 12 முறை நடைபெற்றுள்ளது.

இதில் ஏழு முறை சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகள்தான் கைப்பற்றியுள்ளன.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்லும் அணி எது என்று யாரிடம் கேட்டாலும் சென்னை சுப்பர் கிங்ஸ் அல்லது மும்பை இந்தியன்ஸ் என சற்றென்று சொல்வார்கள்.

ஆனால் இந்த முறை சென்னை சுப்பர் கிங்ஸ் அணிதான் கோப்பையை வெல்லும் என அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரெட் லீ கூறுகையில் ”ஐக்கிய அரபு அமீரகத்தின்’ சூழ்நிலை சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு சாதகமாக இருக்கும் இதனால் அந்த அணிக்குத்தான் வாய்ப்பு அதிகமாக உள்ளது என குறிப்பிட்டள்ளார்.

அத்துடன், அவர்களுடைய பலமே, வீரர்கள் முதிர்ச்சி அடைந்தவர்களாகவும், வயதானவர்களாகவும் இருப்பதுதான் இளம் வீரர்கள் அணியில் உள்ளனர் என்றாலும் அவர்களை சுற்றி நீண்ட காலம் விளையாடிய வீரர்கள் வளம் வருகிறார்கள் இது அவர்களுடைய மிகப்பெரிய பலம் என பிரெட் லீ மேலும் குறிப்பிட்டுள்ளார்.