இலங்கை அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மார்க் ராம்பிரகாஷ் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்க அவர் ஆர்வமாக இருப்பதாகவும் இலங்கை கிரிக்கட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ராம்பிரகாஷ் நியமனம் குறித்து இலங்கை கிரிக்கட் நிறுவன அதிகாரிகளின் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது இலங்கை அணியின் தற்காலிக வேகப்பந்து வீச்சு மற்றும் தற்காலிக தலைமை பயிற்சியாளராக ருமேஸ் ரத்னாயக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.