3வது போட்டியிலும் இந்தியா வெற்றி; இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது

3rd test
3rd test

இந்தியா – தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ரஞ்சியில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 497 ஓட்டங்களை குவித்து ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்சில் 162 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து பாலோ-ஒன் பெற்று தொடர்ந்து 2வது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடியது.

இந்நிலையில் நான்காம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கிய சிறிது நேரத்தில் 133 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. இதனால் ஒருநாள் மீதமுள்ள நிலையில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி உள்ளது.

போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடராட்ட நாயகனாகவும் ரோகித் சர்மா தெரிவு செய்யப்பட்டார்.