சுற்றுலா இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய பிரதமர் அணிக்கும் இடையில் இடம்பெற்ற பயிற்சி போட்டியின் போது சுவாரஸ்யமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த போட்டி இடம்பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவுஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்கொட் மொரிசன் திடீரென வீரர்களுக்கு தண்ணீர் எடுத்துக்கொண்டு மைதானத்திற்கு சென்றுள்ளார்.
பிரதமரின் இந்த செயல்பாடு தொடர்பிலான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.