நடைபெறவுள்ள இந்தியன் பிரமீயர் லீக் போட்டி தொடரில் விளையாடவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஊடகமொன்று இதனை அறிவித்துள்ளது.
முன்னதாக தொற்றுறுதியான இரண்டு வீரர்கள் தவிர்ந்த அனைவரும் இன்று முதல் பயிற்சி நடவடிக்கைகளை தொடர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்றுறுதியாகவில்லை என உறுதியானமையை அடுத்து பயிற்சி நடவடிக்கைகள் ஆரம்பமாகின்றன.
எவ்வாறாயிம் தொற்றுறுதியான நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இரண்டு வீரர்களுக்கும்; 14 நாட்களுக்கு பின்னர் மீண்டும் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.