இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் தாம் பங்குகொள்ளப் போவதில்லை என சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
தமது இந்த முடிவினை இன்று சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காகவே இந்த முடிவை தாம் மேற்கொண்டுள்ளதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த பிறிதொரு வீரரான சுரேஷ் ரெய்னாவும், தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் பங்குகொள்ளப் போவதில்லை என அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் அணியினர், இன்று பயிற்சியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை தவிர்ந்த ஏனைய அணியினர், பயிற்சிகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.