இலங்கை அணியின் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்களின் பெயர்களை இரண்டு முன்னணி கிரிக்கெட் மைதானங்களின் அரங்குகளுக்கு சூட்டி அவர்களை கௌரவிப்பதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
முன்னாள் அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க, அரவிந்த டி சில்வா மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரின் பெயர்கள் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் 3 அரங்குகளுக்கு சூட்டி கௌரவிக்கப்படவுள்ளது.
இதேநேரம் பல்லேகல சர்வதேச மைதானத்தின் அரங்குகளுக்கு சொந்த ஊர் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோரின் பெயர்கள் சூட்டப்படவுள்ளன.
கண்டியில் பல்லேகல அரங்கிற்கு முத்தையா முரளிதரனின் பெயரை சூட்ட மத்திய மாகாண சபை முன்னதாக அறிவித்திருந்தபோதும் அது இதுவரை அமுல்படுத்தப்படவில்லை.