நடப்பு ஆண்டுக்கான இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் முதலாவது போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக ரோஹித் ஷர்மா ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கவுள்ளார்.
இந்தியன் பிரிமியர் லீக் தொடர் குறித்த குறித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் இணையத்தள சந்திப்பு, அணியின் பயிற்சியாளர் மஹேல ஜயவர்தன தலைமையில் இடம்பெற்றபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தொடர்ந்து 13 ஆவது வருடமாகவும், மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக ரோஹித் ஷர்மா களமிறங்கவுள்ளார்.
அத்துடன், IPL தொடரில் அணிக்காக எதனையும் செய்ய தான் தயாராக இருப்பதாகவும் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்.