முதல் போட்டியில் சென்னை– மும்பை அணிகள் மோதல்!

155719273960263
155719273960263

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். ரி-20 தொடர் இன்று (சனிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சத்தால் ஒத்திவைக்கப்பட்ட நடப்பு ஆண்டுக்கான குறித்த தொடரின் 13ஆவது அத்தியாயம், இம்முறை இன்று முதல் நவம்பர் 10ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகின்றது.

அபுதாபியில் நடைபெறவுள்ள முதல் லீக் போட்டியில், நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

தொடரின் இரண்டாவது போட்டியில் டெல்லி கெபிட்டல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

மூன்றாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

10 நாட்களில் இரண்டு போட்டிகளில் நடைபெறுகின்றன. முதல் போட்டி 3.30 மணிக்கும், இரண்டாவது போட்டி 7.30 மணிக்கும் நடபெறுகிறது.

இந்த தொடரில் மொத்தம் 53 நாட்கள் நடைபெறும் இ இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடர்களிலேயே இதுதான் மிக நீண்ட தொடர் என்பதும் குறிப்பிடத்தக்கது .