பங்களாதேஷ் அணித்தலைவருக்கு இரு வருட போட்டித்தடை!

hassan
hassan

பங்களாதேஷ், இலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்ற போது சூதாட்டக்காரர்கள் ஷகிப் அல் ஹசனை நாடியுள்ளனர். அதேபோல் ஐ.பி.எல் தொடரில் விளையாடும் போதும் நாடியுள்ளனர்.

இது குறித்த விஷயம் ஐ.சி.சி இன் ஊழல் தடுப்புப் பிரிவிற்கு தெரியவந்து அவர்கள் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் ஷகிப் அல் ஹசன் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனால் இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட ஐ.சி.சி தடை விதித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள பங்களாதேஷ் அணியின் T20I கிரிக்கெட் அணிக்கு மஹ்மதுல்லாவும், டெஸ்ட் அணிக்கு மொமினுல் ஹக்கும் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.