நேற்றைய ஜ.பி.எல் போட்டியில் வெற்றி பெற்றது றோயல் செலஞ்சர்ஸ் அணி!

royal
royal

இந்தியன் ப்றீமியர் லீக் தொடரில், சன்றைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் நேற்று இடம்பெற்ற போட்டியில், பெங்களுர் அணி 10 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

இந்தியன் ப்றீமியர் லீக் தொடரின் மூன்றாவது போட்டியாக இடம்பெற்ற இந்தப் போட்டி, டுபாயில் நடைபெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி, 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது.

164 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய சன்றைசர்ஸ் ஐதராபாத் அணி, 19.4 ஓவர்களில் 153 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.

இதேவேளை, சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும், இராஜஸ்தான் றோயல்ஸ் அணிகளுக்கும் இடையிலான போட்டி, இன்றிரவு 7.30க்கு சார்ஜாவில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.