இலங்கை தேசிய கபடி அணிக்கான பயிற்றுவிப்பாளர்களாக இரு தமிழர்கள் நியமனம்!

kabaddi 1
kabaddi 1

இலங்கை தேசிய கபடி அணிக்கான பயிற்றுவிப்பாளர்களாக மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த இரு தமிழர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கபடி போட்டிகளில் பங்கு பற்றி பல சாதனைகளை நிலைநாட்டிய மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் துரைசிங்கம் மதன் ஆண்கள் அணிக்கான பயிற்றுவிப்பாளராகவும் துரைசாமி மதன்சிங் பெண்கள் அணிக்கான பயிற்றுவிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச ரீதியில் இடம்பெறும் போட்டிகளில் கலந்து கொள்ளும் இலங்கை கபடி அணியினை பயிற்றுவிக்கும் பணிகளுக்காக இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவ்விரு தமிழர்களும் அம்பாறையில் இடம்பெற்ற கிழக்கு மாகாண வர்ண கௌரவிப்பு விழாவில் சிறந்த பயிற்றுவிப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.