லங்கா பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபையினால் இன்று(30) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா பிரீமியர் லீக் தொடரை நவம்பர் 14 ஆம் திகதி ஆரம்பிக்க முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் விளையாட கூடிய வகையிலும், வீரர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு தேவையான வசதிகள் என்பனவற்றை கருத்தில் கொண்டும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.